×

சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது

அகர்தலா: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பெங்களூரு உள்ளிட்ட சில மாநிலங்களில் வசித்து வருகின்றனர். அந்த வகையில் வங்கதேசத்தினர் சிலர் திரிபுரா வழியாக ஊடுருவி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தலாய் மாவட்டத்தின் எல்லை கிராமமான மச்சுமிர் பகுதியில் காவல்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் ஊடுருவிய 4 குழந்தைகள் உள்பட 11 பேரை திரிபுரா காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரயில் டிக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

The post சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது appeared first on Dinakaran.

Tags : Tripura ,Bangladesh ,India ,West Bengal ,Bengaluru ,Bangladeshis ,Dinakaran ,
× RELATED தொழிலாளியிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது